Saturday, July 31, 2010 4:17 AM IST
Click
முக்கியச் செய்திகள்
பேராவூரணி அருகே கோஷ்டி மோதல்:​ 3 பேர் கைது

First Published : 09 Feb 2010 08:29:01 AM IST

Last Updated : 09 Feb 2010 09:52:43 AM IST

பேராவூரணி, பிப்.8:​ தஞ்சாவூர் மாவட்டம்,​​ பேராவூரணி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இரு தரப்புகளைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு,​​ 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​ ​ சேதுபாவாசத்திரம் காவல் சரகம் தில்லங்காட்டைச் சேர்ந்த பூமாலை,​​ ரெங்கநாதன் ஆகியோரிடையே இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

​ ​ இந்நிலையில்,​​ திங்கள்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ரெங்கநாதன்,​​ பஞ்சாட்சரம்,ரோகினி ஆகியோருக்கு வெட்டு விழுந்து,​​ தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

​ ​ சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் பூமாலை கொடுத்த புகாரின் பேரில் ரெங்கநாதன்,முணியன்,சரிதா,ரோகினி உள்ளிட்ட 7 பேர் மீதும் ரெங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் வீரத்தமிழன்,பூமாலை,உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிந்து உதயகுமார்,வீரராஜன்,கார்த்தி உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்