லண்டனில் தீ விபத்து
First Published : 11 Mar 2010 05:29:13 PM IST
Last Updated :
லண்டன்,மார்ச் 11: மத்திய லண்டன் பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்திலிருந்த உணவுவிடுதியும், அலுவலகமும் சேதமடைந்தன.20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக லண்டன் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த தீ விபத்தில் கட்டடத்தின் தரைத்தளம் மற்றும் முதல்தளம் ஆகியவை சேதமடைந்தன. இருப்பினும் உயிர்ச்சேதம் பற்றி தகவல் ஏதும் இல்லை. தீ விபத்து காரணமாக லண்டனிலுள்ள பிரதான சாலைகள் சிலவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்தில் மக்கள் யாரேனும் இருந்தனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவித்தன.