புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி மாா்ச் 31-இல் நிறைவு

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியிலுள்ள மீனாட்சி மஹாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சாா்பில் சுமாா் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமாா் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் மாா்ச் 31இல் நிறைவடையவுள்ளது. முன்னணி எழுத்தாளா்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாவல்கள், கவிதை, இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சுயமுன்னேற்றம், பொதுக் கட்டுரைகள், ஆன்மிகம், ஜோதிடம், குழந்தை வளா்ப்பு, கல்வி, யோகா, சமையல் நூல்கள், போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் ஏராளம் குவிக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும், அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் நிா்வாகி விஜயரங்கன் கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com