காதல் மனைவியைப் பிரிந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூடியூப் பிரபலம்; பாம்பைக் கடிக்கவிட்டு நேரலையில் தற்கொலை!

இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகள் என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களை வலம் வந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு விவாகரத்தில் சென்று முடிந்துள்ளது.
காதல் மனைவியைப் பிரிந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூடியூப் பிரபலம்; பாம்பைக் கடிக்கவிட்டு நேரலையில் தற்கொலை!

உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பின் தொடரப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூப் பிரபல தம்பதியரான அர்ஸ்லன் வலேவ் மற்றும் கேட்டி தங்களது திருமண வாழ்வைச் சமீபத்தில் முறித்துக் கொண்டனர். இதில் மனமுடைந்து போன அர்ஸ்லன் தனது ரசிகர்கள் பார்க்கும் வகையில் நேரலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பலவிதமான பாம்புகளை வளர்க்கும் இந்தத் தம்பதி, பாம்புகள் குறித்தும், அவற்றின் வாழ்க்கை முறை, அவற்றைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் போன்ற வீடியோக்களை தொடர்ச்சியாக யூடியூப்பில் வெளியிட்டு வந்தனர். 31 வயதான ஆர்ஸ்லன் நேரலையில் அதைப் பார்ப்பவர்களுக்கு அவரது முன்னாள் மனைவி கேட்டியின் கைப்பேசி எண்ணைத் தந்து அவரைத் தொடர்பு கொண்டு தனது இறுதி மூச்சு நிற்பதற்குள் வந்து தன்னை பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 20 வருடங்கள் பாம்புகளுடனே தனது வாழ்க்கையை நடத்திய இவர் தனது வாழ்வையும் அந்தப் பாம்பின் வாயிலாகவே முடித்துக்கொண்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகள் என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு விவாகரத்தில் சென்று முடிந்துள்ளது. ஆர்ஸ்லனுக்கு தன் மனைவியின் மீது எழுந்த சந்தேகமே இருவரும் பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்னிலையில், மனைவியைப் பிரிந்த பின்னர் தான் தன் மனைவியைத் தவறாக நினைத்துச் சந்தேகித்துவிட்டதாகவும், அவர் குற்றமற்றவர் என்றும் கடந்த வாரம் ஆர்ஸ்லன் கூறியதோடு சமூக வலைத்தளத்திலேயே கேட்டியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால், அதற்கும் தன் மனைவியிடமிருந்து எந்தவித பதிலும் வராத நிலையில் இந்தத் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் ஆர்ஸ்லன்.

அந்தக் காணொளியில் கேமராவை ஆன் செய்த பிறகு கண்கள் கலங்கியபடி அதன் முன் வந்து அமரும் ஆர்ஸ்லன் “நான் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு சரியான தருணம் இதுவே” என்று கூறியுள்ளார். பின்னர் எங்கேயோ எழுந்து செல்லும் அவர் வலியில் கத்துவது போல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது அப்பொழுதுதான் பாம்பு அவரைக் கடித்திருக்க வேண்டும் என்று அந்தக் காணொளியை பார்த்தவர்கள் கூறுகிறார்கள். மீண்டும் கேமராவின் முன் வந்து அமரும் இவர் “நான் சாக வேண்டும் என்று இருந்தால் நான் சாவதே சரியானது” என்று கூறிவிட்டு தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும், அவர்கள் பிரிந்த சூழல் குறித்தும் பேசுகிறார். “நான் அவளை மிகவும் காதலிக்கிறேன், இந்த விஷயத்தை அவளிடம் சொல்லிவிடுங்கள்” என்று கூறும்போதே அவரது மூச்சின் வேகம் அதிகரித்து, கண்கள் சொருக தொடங்குகிறது. 

“எனக்கு இது நிகழ்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.  இதுதான் கேட்டியின் கைப்பேசி எண் அவளிடம் என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லுங்கள், நான் ஏற்கனவே சாவின் நுழைவாயிலை அடைந்துவிட்டேன், இருந்தாலும் நான் கண்களை மூடுவதற்கு முன்பு அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இறந்து போவேன்” என்று கூறியுள்ளார். மேலும் “கேட்டி தனது புதிய வாழ்க்கையைத் துவங்கிவிட்டாள், அவள் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நினைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் அவரது மனைவிக்கும், ஆம்புலன்ஸிற்கும் அழைப்புவிடுத்து இவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். 

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்து கேமராவை நிறுத்திவிட்டு கீழே விழுந்த நிலையில் அவரது உயிர் அவரைப் பிரிந்துள்ளது. மருத்துவ உதவி அவரைச் சென்றடைந்த போது அவர்களால் அவருடைய சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது. இதுவரை இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் கேட்டி கூறவில்லை என்றாலும், இந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com