கூவம் நதியோரம் வாழும் கொத்தடிமைகள்! சாலை சிறார்களுக்கு மறுவாழ்வு தருமா அரசு?

குடியிருப்பதற்கான வீட்டுவசதி ஒரு அடிப்படை உரிமை. அரசு இதை உறுதிசெய்யவில்லை என்றால், யார் செய்வார்? இப்போது இல்லையென்றால் எப்போது?
கூவம் நதியோரம் வாழும் கொத்தடிமைகள்! சாலை சிறார்களுக்கு மறுவாழ்வு தருமா அரசு?

குடியிருப்பதற்கான வீட்டுவசதி ஒரு அடிப்படை உரிமை. அரசு இதை உறுதிசெய்யவில்லை என்றால், யார் செய்வார்? இப்போது இல்லையென்றால் எப்போது?

கொல்கத்தா மற்றும் சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, குடியிருப்பதற்கான தங்குமிடம் குறித்த எனது கருத்து மாறியது. கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான நபர்கள், குடிசைப் பகுதிகளில் இருப்பதைவிட இன்னும் மிக மோசமான நிலைகளில், தெருக்களில் வசிக்கின்றனர். தெருக்களில் இரவு நேரத்தில் தாங்கள் தூங்கும்போது ‘மனித மிருகங்களிடமிருந்து’ எப்படி அவர்களது நாய்கள் அவர்களைப் பாதுகாக்கின்றன என்பது குறித்து வளரிளம் பருவத்திலுள்ள பெண்களிடமிருந்து நேரடியாக நான் கேட்ட வாழ்க்கைக் கதைகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 

சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள காந்தி இர்வின் சாலைக்கு அடுத்த சந்துக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா? அங்குச் சென்றால் 20 லிருந்து 25 பெரிய பெட்டிகள் ஒரு கம்போடு சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதைப் பார்த்தால் இது என்னவென்று நீங்கள் வியப்பிலும் மூழ்கக்கூடும். இங்கு தான் பல குடும்பங்கள் தங்கியிருந்து அவர்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்தப் பெட்டிகள் தான் அவர்களது அடையாளம். ‘வீடு’ என்பது எப்போதுமே ஒரு வெறும் தங்குமிடத்தை மட்டும் குறிப்பதில்லை. நமது உடைமைகளையும், பொருட்களையும் வைப்பதற்கான ஒரு அமைவிடமாகவும் அது இருக்கிறது. 

இத்தகைய குடும்பங்களைத் தான் தெரு குடும்பங்கள் மற்றும் சாலைச் சிறார்கள் என்று நாம் அழைக்கிறோம். பல தலைமுறைகளாகவே இவர்களது அடையாளம் என்பது அத்தெருவின் 3-வது அல்லது 4வது மின் கம்பம் அல்லது மஞ்சள் நிறத்திலான பெட்டி என்பதாகவே இருந்துவருகிறது. இவர்களைத் தெரு குடும்பங்கள், சிறார்கள் என்று அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அழைப்பதனால் மனநல ரீதியில் அழுத்தமும், அடக்குமுறையும்கூட இவர்கள் மீது சாத்தப் படுகிறது.

வாழ்வதற்கான உரிமை குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது சரத்து பேசுகிறது. இது, வெறுமனே உயிர்வாழ்வது குறித்ததல்ல; கண்ணியத்தோடு வாழ்வதைப் பற்றியதாகும். நமது நாட்டின் உச்சநீதிமன்றம் இதை பல்வேறு வழக்கு விசாரணைகளின்போது தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆகவே தான் கல்வி கற்பதற்கான உரிமை என்பது சரத்து 21யு-வாக இடம்பெற்றிருக்கிறது. இதைப்போலவே, உடல்நல சிகிச்சைக்கான உரிமையாகச் சரத்து 21டி-யும் மற்றும் குடியிருப்பதற்கான தங்குமிட உரிமையாகச் சரத்து 21ஊ-யும் இடம்பெற வேண்டும் என்பது எனது விரும்பமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்தியாவில், ஏழை எளியவர்களக்கான அரசு வீட்டுவசதி திட்டங்களில் பெரும்பாலானவை, இதில் பயன்பெறும் நபர்கள், அவர்களது பெயரில் 23 சென்ட் நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை வைத்திருக்கின்றன. சட்டப்படி சரியாக இருக்கின்ற அனைத்தும் நன்னெறியின்படி சரியானதாக இல்லாமல் போகலாம். விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு அல்லது இந்த விஷயத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்காத நபர்களுக்குச் சட்டங்கள் பாகுபாடு காட்டுபவையாக இருக்கக்கூடும். நிஜமான எதார்த்த உலகில், சில சட்டங்கள் ஏழைகளுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பாலத்திற்கு கீழே அல்லது கூவம் ஆற்றுக்குக் கரையோரமாக அல்லது அங்கீகாரம் பெறாத நிலத்தில் ஒரு குடிசையை நீங்கள் கட்டக்கூடாது. இது, ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் ஆகிய அனைவருக்குமே பொருந்தும். ஆனால், இந்த உலகில் நாற்றமெடுக்கும் கூவமாற்றின் கரையோரத்தில் யார் குடிசை போடுவார்கள்? நீங்களோ அல்லது நானோ போடப்போவதில்லை. ஆனால்,சொந்தமாக நிலமே இல்லாத மற்றும் தனது குடும்பம் தூங்குவதற்கு ஒரு இடத்தை வழங்குவதற்கு வசதி வாய்ப்பே இல்லாத ஒரு நபர் தான் அங்கு குடிசைபோட எண்ணக்கூடும். சில சட்டங்கள் அனைவருக்கும் சமமானவை, ஆனால் பணக்காரர்களுக்கும் மற்றும் அதிகாரமிக்கவர்களுக்கும் அதிக சமமானவையாக அவை இருக்கக்கூடும்.

கொத்தடிமைத்தனம் என்ற கொடுமையான சுழற்சியை இது விளைவிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர்கள்,கடன் முன்பணம் அல்லது சமூக கடப்பாடு ஆகியவற்றின் காரணமாக வேறிடங்களில் வேலைவாய்ப்பைத் தேட சுதந்திரமில்லாமல், தாங்கள் விரும்புகின்ற இடங்களுக்குச் செல்வதற்கான உரிமையும் இல்லாமல், தங்களது உற்பத்தி பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் விற்பதற்கான உரிமையின்றி அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையும் இன்றி விலங்குகளைவிட மிக மோசமான நிலைகளில் வசிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் போவதற்கு இடம் ஏதுமில்லை; நிலம் இல்லை என்பதால் வீடோ, குடிசையோ இல்லை. வீடு இல்லை என்பதால் ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ என அடையாளச் சான்றுகளும் எதுவுமில்லை. இவை ஏதும் இல்லாத காரணத்தால் மறுவாழ்வு நிவாரணங்களைப் பெறுவதற்கும் வழியில்லை. இந்த நிலையில் கொத்தடிமையிலேயே தொடர்ந்து இருப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை என்று இவர்கள் கருதுவதில் வியப்பும் ஏதுமில்லை.

நமது முன்னேற்றத்திற்கான வட்டப்பாதையில் ஆதார மையமாக இது இருப்பதால், தங்குவதற்கான ஒரு வீடு இருப்பது எந்தவொரு மனிதநபருக்கும் அத்தியாவசியமானதாகும். அது, உங்களுக்கு ஒரு முகவரியை, ஒரு அடையாளத்தை, ஒரு சமூகத்தை மற்றும் கண்ணியத்தை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பொது வினியோக முறை உட்படப் பிற சட்ட ரீதியான உரிமைத் தகுதிகள் போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களோடு சேர்த்து தருகிறது. ஒரு இடத்தில் குடியிருக்கத் தொடங்குவது சிறப்பான வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு தடங்கலற்ற கல்வி வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. மீண்டும் கொத்தடிமை முறையில் சிக்கி சுரண்டப்படும் வாய்ப்பைக் குறைக்க இது உதவுகிறது. இதன்மூலம், உடல் ரீதியான மற்றும் மனரீதியான நலத்தோடு வாழ்வதற்கு வழி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனில் (ஐதுஆ) பணியாற்றும் நாங்கள், 5000-க்கும் அதிகமான கொத்தடிமை தொழிலாளர்களைக் கொத்தடிமையிலிருந்து மீட்பதில் அரசுக்கு ஆதரவளித்திருக்கிறோம். கொத்தடிமையிலிருந்து இவர்கள் வெளியே வரும்போது அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு போவதற்கு இடம் ஏதும் இருப்பதில்லை. பொன்னேரியில் 2 ஆண்டுகளாக ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் விடுவிக்கப்பட்ட 7 குடும்பத்தினர் தங்கியிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மிகச் சமீபத்தில் தான் இக்குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேறுபலர் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்காவது அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களோடு சேர்ந்து வசிக்கின்றனர். கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு கூட மீண்டும் அதிலேயே சிக்குகின்ற பலவீனமான நிலையிலேயே இவர்களது சூழ்நிலை இவர்களைத் தள்ளுகிறது. 

2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 158 குடும்பங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 64 குடும்பங்களுக்கே தங்குமிட வசதி இருப்பதும், மீதம் 94 குடும்பங்களுக்குத் தங்குமிட வசதி இல்லை என்பது கண்டறியப்பட்டது. 105 குடும்பங்களுக்கு வீட்டு மனைக்கான பட்டா இருந்தபோது, 53 குடும்பங்களுக்கு வீட்டு மனைக்கான பட்டா இல்லை என்பதும் அதில் தெரியவந்தது. 41 குடும்பங்களுக்கு நிலம் இருந்தபோதிலும், அவர்கள் தங்குவதற்கென சொந்தமாக வீடு எதுவும் இல்லை என்ற தகவலும் அறியப்பட்டது. 

2014ம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்ட 83 குடும்பங்களில் 30 குடும்பங்களுக்கே தங்குமிட வசதி இருந்தபோது 53 குடும்பங்களுக்கு அவ்வசதி இல்லை. 10 குடும்பங்கள் வீட்டுமனை பட்டாவைக் கொண்டிருந்தபோது 73 குடும்பங்களுக்கு மனை பட்டா இல்லை. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு (26மூ) அடுத்ததாக வீட்டு வாடகை செலவு (17மூ) என்பதே கொத்தடிமையில் சிக்குவதற்கான இரண்டாவது முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. கொத்தடிமைக்கான காரணங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளிப்படுத்தியிருப்பது வியப்பூட்டக்கூடிய உண்மையாகும். அரசின் திட்டங்கள் பெரும்பாலானவற்றில் கட்டுமானப் பணியில் குறிப்பிட்ட நிலை நிறைவுசெய்த பிறகே பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கட்டுமானப் பணியை முடிப்பதற்காகக் கடன் வாங்குமாறு அரசின் இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் மற்றும் பெரும்பாலான நேர்வுகளில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்துகின்ற நிலையில் இவர்கள் இருப்பதில்லை. 

விளிம்பு நிலை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்களில் ஏறக்குறையப் பெரும்பாலானவற்றில், தங்களது வாழ்வாதார வாய்ப்புகளிலிருந்து இவர்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே பொதுவான காரணியாக இருக்கிறது. வந்தவாசி தாலுகாவில் மீசநல்லூர் கிராமத்தில் செய்யாரின் முன்னாள் துணை ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அவர்களால், தொடங்கிச் செயல்படுத்தப்பட்ட இருளர் நலவாழ்வு திட்டம் ஒன்றை இங்குக் குறிப்பிட நான் விரும்புகிறேன். வீடுகள், கறவை மாடுகள், பால் சங்கம் மற்றும் தீவன சாகுபடி பகுதிகள் ஆகியவற்றை உருவாக்கித்தர வேண்டும் என்ற திட்டத்தோடு 1.59 கோடி என்ற மொத்த மதிப்பீட்டைக் கொண்டு 43 இருளர் குடும்பங்களுக்கு (185 பயனாளிகள்) 6.2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இருளர்களுக்கான ஒரு பசுமை வீட்டுவசதி சமூகமான இதற்கு அப்துல்கலாம் புரம் என அவர் பெயர் சூட்டியிருந்தார். இச்செயல்திட்டத்திற்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்க மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியின் சமூக பணி துறையோடு ஐஜேஎம் ஒத்துழைப்பை மேற்கொண்டது. ஒரு முன்மாதிரி செயல்திட்டமாக இது உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இத்திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை நாட்டின் பிற பகுதிகளுக்கும் இத்தகைய திட்டங்களை உருவாக்குவதில் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். விடுவிக்கப்பட்ட 100 கொத்தடிமை தொழிலாளர் குடும்பங்களுக்கான இரண்டாவது கட்ட செயல்பாடாக 6.5 கோடி ரூபாய் என்ற மொத்த செலவினத் தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் கிராமத்தில்,வீட்டுமனைகளை ஆர்டிஓ ஒதுக்கீடு செய்திருந்தார். ஆனால், அரசின் இந்தச் செயல்முறை நிறைவடையும் வரை மரங்களுக்குக் கீழே இவர்கள் வசிக்க நேர்ந்தது. அரசு, ஐஜேஎம், எம்சிசி மற்றும் பிற சமூக தொண்டு நிறுவனங்களின் உதவியோடு 11 வீடுகள் இவர்களுக்காகக் கட்டித்தரப்பட்டன. அதன்பிறகு, இவர்கள் ஒரு சுய உதவிக்குழுவைத் தொடங்கி, சட்டப்படியான உரிமைச் சலுகைகளை பெற்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இப்போது தவறாது பள்ளிக்குச் சென்று கல்வி பயில்கின்றனர். இப்போது அவர்களுக்கென்று சொந்த வீடு இருப்பதால் தங்களது சுய மதிப்பு அதிகரித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். 

2016 மே 17ம் தேதியன்று திருத்தியமைக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளருக்கான மத்திய பிரிவு திட்டத்தின்படி (ஊளுளு), ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றவர்கள் போன்ற சிறப்பு வகையினத்தவர் ஆகியோருக்கு முறையே ரூ.1 லட்சம், 2 லட்சம் மற்றும் 3 லட்சம் என்ற மறுவாழ்வுத் தொகையைப் பெற விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தப் பலன்களை இதுவரை எவரும் பெற்றிருப்பதாக ஆதாரங்கள் எதுவுமில்லை.

விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித்தரும் திட்டங்களை ஆதரிப்பதற்கு கார்பரேட் நிறுவனங்களும் மற்றும் குடீழுகளும் இருக்கின்றன. 

இந்தியாவில் வீடு இல்லாதவர்களுக்குக் குடியிருப்பு வசதி என்பது ஒரு அடிப்படை உரிமையாக ஆகவேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் முனைப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதற்கு தங்களது கார்பரேட் சமூக பொறுப்புறுதி செயல்பாட்டிலிருந்து கார்பரேட் நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

2011ம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பு விவரங்களின்படி, இந்தியாவில் 1.77 மில்லியன் நபர்கள் வீடு இல்லாதவர்களாக இருக்கின்றனர் மற்றும் சென்னையில் ஏறக்குறைய 11000 நபர்கள் வீடு இல்லாதவர்களாகத் தெருக்களில் வசிக்கின்றனர். இத்தகைய அடித்தட்டு மக்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகளை எப்போது நாம் வழங்கப்போகிறோம்? நிலம் இல்லாத, தங்க வீடு இல்லாத மனிதர்களை நமது சொந்த சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதி அவர்களது அடிப்படைத் தேவைகளை எப்போது நாம் பூர்த்திசெய்யப்போகிறோம்?

அரசு இதைச் செய்யவில்லை என்றால் யார் செய்வது? இப்போது இல்லையென்றால் எப்போது?

கட்டுரை ஆசிரியர் 
திரு. ரெனி ஜேகப்,

இயக்குநர் - சமூக கூட்டாண்மைகள் 
இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (ஐதுஆ)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com