நான்கு கண்ணில் தோன்றும் ஒற்றை கனவான காதலை கொண்டாடுவோம்! 

காதலர் தினம் தேவை என்று ஒரு சாராரும் தேவையில்லை என்று ஒரு சாராரும் தொடர்ந்து கட்சிகட்டி
நான்கு கண்ணில் தோன்றும் ஒற்றை கனவான காதலை கொண்டாடுவோம்! 

காதலர் தினம் தேவை என்று ஒரு சாராரும் தேவையில்லை என்று ஒரு சாராரும் தொடர்ந்து கட்சிகட்டி வாதம் புரிந்தாலும், ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாதம் 14 தேதி வாலண்டின்ஸ் டே என்ற காதலர் தினம் காதலர்களுக்கிடையே உற்சாகமாக கொண்டாடப்பட்டுதான் வருகிறது.  காதல் கொண்டாட்டமானது. அது வாழ்விலே ஒரு முறை மட்டும் சுவைத்தவர்கள் உண்டு. காதல் தோல்வியில் துவண்டவர் உள்ளார்கள். ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்று தொடர்பவர்களும் உள்ளார்கள். இந்த பிரபஞ்சம், இந்த வாழ்க்கை காதலுக்கானது என்று நம்புகிறவர்கள் உலகெங்கிலும் உள்ளார்கள். அதனால் தான் அழியா முத்திரையாக உலக சரித்தரத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, சினிமா என காதலை ஊடகங்களும் வளர்த்தெடுப்பதில் கணிசமான பங்களிப்பது உண்மை. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லிச் சென்ற முண்டாசுக் கவிஞனின் வரி இன்றுவரை உயிர்ப்புடன் மட்டுமல்லாமல் உவப்புடன் உள்ளது என்பதை உள்ளத்தில் காதல் சுமந்தவர் அறிவார்.

இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக தினமணி இணையதளம் சில சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு :

***

***

***

***

***

***

***

***

***

***

***

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com