மகன்-மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து மகன் குடும்பத்தை பிரிக்கும் சதியில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிகுறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
காதல் திருமணம் செய்ததால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மீது, அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா, கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பல்கலைக்கழக இயக்குநர் பிரேம் குமாரின் மகள் பிரத்யூஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரத்யூஷா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், திராவிடர் இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவரும் ஜாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து மேடைகளில் பேசு வரும் தனது தந்தை சிவா, தனது மனைவி பிரதியூஷாவுக்கு மர்ம நபர்கள் மூலம் போனில் தொடர்ந்து மிரட்டி வருவதாக சூர்யா புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களது காதல் திருமணத்தில் தந்தை சிவாவுக்கு உடன்பாடு இல்லை எனவும், என் மனைவியின் நடத்தை குறித்து மோசமான கட்டுக் கதைகளையும் பரப்பி வருகிறார். மனைவியை பிரிந்து வெளிநாட்டில் செட்டிலாகுமாறு என்னையும் வலியுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக திருச்சி சிவாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.