முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் (மார்ச்) 25, 26 ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டது.
இப்போது இந்தத் தேர்வுக்கான முடிவை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. முடிவுகளை www.annauniv.edu/tancet2017 என்ற இணையதளத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை, ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என 'டான்செட்' செயலர் மல்லிகா தெரிவித்துள்ளார்.