சென்னை: கணினி சான்றிதழ் தேர்வு குறித்த முடிவு இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப கல்வித்துறையால், ஜூன் மாதம் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று புதன்கிழமை (ஆக.9) வெளியாகிறது. தேர்வு முடிவை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின், www.tndte.com என்ற இணையதளத்திலும், பாலிடெக்னிக் கல்லுாரி தேர்வு மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், உரிய ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.