பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:-
கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று பதிவெண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.