பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
சென்னைப் பல்கலை.யில்...: தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 21, 22) நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் ஜனவரி 28, 29-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
பிற தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வழக்கம்போல நடைபெறும் என சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறந்தநிலைப் பல்கலை.யில்...: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மார்ச் 19, 25-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com