பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 118 பேர் சேர்க்கை

பி.எட். கலந்தாய்வின் முதல் நாளில் 118 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றனர்.

பி.எட். கலந்தாய்வின் முதல் நாளில் 118 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றனர்.
2 ஆண்டு பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகியது.
முதல் நாள் கலந்தாய்வுக்கு பார்வைக் குறைபாடு உடைய 35 பேர், மாற்றுத்திறனாளிகள் 83 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 21 பேர், பழங்குடியின பிரிவு மாணவர்கள் 18 பேர் என மொத்தம் 157 பேர் அழைக்கப்பட்டனர்.
இவர்களில் பார்வைக் குறைபாடுடையோர் 31 பேர், மாற்றுத்திறனாளிகள் 53 பேர்,
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 19 பேர், பழங்குடியினர் 15 பேர் என 118 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். வரும் சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com