ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி கடந்த புதன் கிழமை (மார்ச் 1) நடைபெற்றது.
இந்த போட்டியில் 17 கல்லூரிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு எம். பிரசாத் கலந்து கொண்டார், விழாவில் திரு பாலாஜி ரங்கநாதன் சிறப்புரையாற்றினார்.