மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.
தமிழகமெங்கும் நிலத்தடி நீரைப் பாழ்படுத்தும் கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 300 பேர் பூந்தண்டலம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் வளர்ந்து காடாகக் காட்சியளித்த கருவேலமரங்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் யில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் ஜெயகுமார், வணிக மேலாண்துறை இயக்குநர் மாறன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சதீஷ்குமார், கல்லூரி அறங்காவலர்கள் சதீஷ், பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.