'நீட்' தேர்வு மையங்களை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் நீடிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மேல்நிலைப் பள்ளித் தேர்வு வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்களது 'நீட்' தேர்வு மையங்களை ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், வரும் மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்தக் காலக்கெடு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், தற்போதைய 'நீட்' தேர்வு மையங்கள் மட்டுமன்றி, மகாராஷ்டிரத்தின் நாந்தேட் நகரிலும் கூடுதலாக ஒரு தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com