ராணுவத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி

இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட உள்ளது.

இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐஐடியில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியை ஐஐடி மேற்கொள்ள உள்ளது. ராணுவ அதிகாரிகளும், ஐஐடி பேராசிரியர்களும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.
ராணுவ அதிகாரிகள் 4 பேருக்கு ஐஐடி-யில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, ஆண்டுக்கு இரு முறை 15 ராணுவ அதிகாரிகளுக்கு 15 நாள் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சியும் ஐஐடி சார்பில் வழங்கப்பட உள்ளது என சென்னை ஐஐடியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com