தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 3,983 மாற்றுத்திறனாளிகளில் 3,515 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பார்வையற்றோர் 97 சதவீதம், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாதோர் 81 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் 90 சதவீதம், பிற வகை சிறப்புப் பிரிவினர் 88 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
பார்வையற்றோர் 24 மாவட்டங்களிலும், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாதோர் 3 மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகள் 2 மாவட்டங்களிலும், பிற வகை சிறப்புப் பிரிவினர் 3 மாவட்டங்களிலும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.