மே 25 முதல் தாற்காலிக  மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் மே 25-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் மே 25-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மே 25-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத் தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com