மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவ.25-இல் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொடர் மழை, சாலைகளில் மழை நீர் தேங்கியதன் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.3) நடத்தப்படவிருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகம் ஒத்திவைத்தது. அன்றைய தினம் நடத்தப்படவிருந்த தேர்வுகள் அனைத்தும் நவ. 25-ஆம் தேதி நடத்தப்படும் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.