நவ. 25 பொறியியல் தேர்வுகள் டிச.4 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 25 -ஆம் தேதி நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை, டிசம்பர் 4 -ஆம் தேதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 25 -ஆம் தேதி நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை, டிசம்பர் 4 -ஆம் தேதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (நவ.3) நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. தற்போது இதற்கான மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 3 -ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள், நவம்பர் 25 - ஆம் தேதியும், நவம்பர் 25 அன்று நடத்தப்பட இருந்தத் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 4 -ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com