சென்னை மாவட்ட பள்ளிகளில் முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னை மாவட்டப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கை:
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com