மீலாது நபி விடுமுறை காரணமாக, டிச. 2-இல் நடைபெற இருந்த பருவத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வேறு தேதிக்கு மாற்றியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: இஸ்லாமியர்களின் மீலாது நபி பண்டிகையையொட்டி, டிச. 2-ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள், டிச.5-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றன.