அரசு மருத்துவமனைகளில் 744 மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10-ஆம் தேதி கடைசி நாள்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இதுவரை 10,790 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மயக்கவியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், தோல் நோய், காது, மூக்கு, தொண்டை பிரிவு, தடயவியல், பொது மருத்துவம் உள்ளிட்ட 19 துறைகளில் 744 மருத்துவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் செப். 20-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அக்டோபர் 10-ஆம் தேதி கடைசி நாள்.
தகுதிவாய்ந்த மருத்துவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைக் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: ஜ்ஜ்ஜ் www.mrb.tn.gov.in