அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (பிப்.5) வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (பிப்.5) வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகம் சார்பில் 2017 நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத கல்லூரி களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com