இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (பிப்.5) வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகம் சார்பில் 2017 நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத கல்லூரி களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.