பிளஸ்-2 முடித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 முடித்தவர்கள் 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) சேர்க்கைக்கான அறிவிப்பு சில
பிளஸ்-2 முடித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 முடித்தவர்கள் 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) சேர்க்கைக்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த பயிற்சியில் சேர்ந்து வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.
காலியிடங்கள்: 90
வயது வரம்பு: 16½  - 19½ -க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.1998 மற்றும் 01.01.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்களி படித்து 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நிலை-1, நிலை-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com