வன சீருடை பணியாளர் இடங்கள் :உடற்தகுதி தேர்வுக்கு அழைப்பு

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் கலந்துகொண்டு தகுதி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் கலந்துகொண்டு தகுதி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழுமம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வனவர் கள உதவியாளர் பணிக்குரிய நபர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நியமன ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றியும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்களின் நகல்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்த நிலையில் அடுத்தக் கட்டத் தேர்வான உடற்தகுதி தேர்வுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் அடங்கிய தாற்காலிகப் பட்டியல் வனத்துறையின் இணையதளத்தில் www.forests.tn.nic.in  இப்போது வெளியிடப்பட்டுள்ளது, இது தொடர்பான தகவல், மேற்படி விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில், உடற்தகுதி தேர்வில் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com