தமிழகத்தில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட் தேர்வு முடிவுகள் அன்னை தெரசா பல்கலைகழகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் செட் தேர்வு பிப்ரவரி மாதம் நடந்தது. அதில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இந்த தேர்வை நடத்தியது.
செட் தேர்வு முடிவுகள் நேற்று www.motherteresawomanuniv.ac.in, www.setresults2016.in என்ற இரு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் தேர்வு எண் உள்ளிட்ட தகவல்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. பிற்பகல் முதல் தேர்வர்களின் செட் தேர்வு மதிப்பெண்களை அறிவிக்கப்பட்டது.