பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
பணி: புரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 400
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்
கல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்)
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017
எழுத்து தேர்வு நடைபெறு தேதி: 27.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/Careers/Admission-2017-18.asp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.