மத்திய புலனாய்வு துறையில் வேலை: செப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய புலனாய்வுத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 1430 உதவி புலனாய்வு அதிகாரி, கிரேடு-II காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
மத்திய புலனாய்வு துறையில் வேலை: செப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய புலனாய்வுத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 1430 உதவி புலனாய்வு அதிகாரி, கிரேடு-II காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1430

பணி: Assistant Central Intelligence Officer Grade-II/Executive

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 31.05.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/DetailedAdvtforACIO-II_11082017%20exam.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com