குரூப் 1 தேர்வு: சென்னை மாணவி முதலிடம்

குரூப் 1 தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவி காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார்.
குரூப் 1 தேர்வு: சென்னை மாணவி முதலிடம்

குரூப் 1 தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவி காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார்.

குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.11) முடிவடைந்தது. இதையடுத்து முதன்மைத் தேர்வு, நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சென்னையைச் சேர்ந்த மாணவி காயத்ரி  முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் மற்றும் தனப்பிரியா ஆகியோர் முறையே 2 மற்றும் 3 -ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்டப் பதிவாளர்கள் உள்ளிட்ட 74 காலிப் பணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு கடந்த ஜூலை 29 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு கடந்த 7 -ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (ஆக. 11) வரை நேர்காணல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com