மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்), பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1.8.2017 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.5,200 முதல் ரூ. 20,200, 40,500 வரை வழங்கப்படும்.
பணியின் பெயர்: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff (MTS) Non Technical)
காலிப்பணியிட விவரம்: தமிழகம் - 453; பிற மாநிலங்கள்- 7847.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். மற்றவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.1.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.04.2017, 30.04.2017, 07.05.2017
மேலும் விவரங்களுக்கு: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/mtsfinalnotice301216.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.