தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே 21 ஆம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 410 மையங்களில் நடைபெற்றது. இதில், சுமார் 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று எழுத்துத் தேர்வுக்கான தேர்வு முடிகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 5:1 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

2 ஆம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் வரும் 12 ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உடல் தகுதி, திறன் தேர்வுகள் ஜூலை இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com