இளைஞர்களுக்கு வாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
இளைஞர்களுக்கு வாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 161

விளம்பர எண்: 5A /2016-17

பணி: Officers in Grade ‘B’

சம்பளம்: மாதம் ரூ.35,150 - 62,400

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம், நிதியியல், புள்ளியியல், கணித புள்ளியியல், கணித பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு நிலை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மற்றும் டெபிட், கிரிடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2017

மேலும்  https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DEPRD030520179C40C723B6CE4AF187FF9AC709A025BE.PDF என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் காணலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com