அக்.12 -இல் விஏஓ பணிக்கு கலந்தாய்வு

வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களுக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.12)  நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்


சென்னை: வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களுக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.12)  நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து  டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது காலியாகவுள்ள இடங்களை நிரப்ப 4-ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் 12 -ஆம் தேதி, சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு உத்தரவை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com