பரமத்தி வேலூர் வருவாய் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியர் வே.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பரமத்திவேலூர் வருவாய் வட்டத்தில் 8 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பபடவுள்ளன.
வருவாய் கிராமம் மற்றும் இன சுழற்சி விவரம்: பெரியசோளிபாளையம்-எம்பிசி மற்றும் டிஎன்சி, ஜமீன் இளம்பள்ளி-பிசி(முஸ்லிம் அல்லாதோர்), சித்தம்பூண்டி-ஜி.டி, செருக்கலை-எஸ்சி, சுங்ககாரம்பட்டி-எம்பிசி மற்றும் டிஎன்சி, தி.கவுண்டம்பாளையம்-பி.சி(முஸ்லிம் அல்லாதோர்) மற்றும் முன்னாள் ராணுவத்தினர், கொமராபாளையம்-ஜிடி(விதவை), சோழசிராமணி-பி.சி முஸ்லிம் விதவை.
இந்த பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராகவும் இருக்க வேண்டும். காலி பணியிடம் உள்ள கிராமத்தை அல்லது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் வரும் 23 ஆம் தேதிக்குள் பரமத்தி வேலூர் வட்டாட்சியருக்கு கிடைக்கும்படி பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து அறிந்துகொள்ள வட்டாட்சியரை நேரில் அணுகலாம்.