மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். RCIL/2017/P&A/44/25
மொத்த காலியிடங்கள்: 45
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineers - 38
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணி: Sr. Manager - 07
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, டிகிரி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.