ரயில்டெல் நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் வேலை

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.  RCIL/2017/P&A/44/25

மொத்த காலியிடங்கள்: 45

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineers - 38
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Sr. Manager - 07
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, டிகிரி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com