பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 158 கிரெடிட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 158
பணி: Officer (Credit)
இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 72 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், வணிகவியல், அறிவியல், பொருளாதாரவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐசிடபுள்யுஏ., கம்பெனி செகரட்டரி படித்தவர்கள், எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO-%202018-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.