வங்கிகளில் 4102 புரொபஷனரி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! 

பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம்
வங்கிகளில் 4102 புரொபஷனரி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! 


பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4102

பணி: Probationary Officer, Management Trainee (CRP PO/MT-VIII)  

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Allahabad Bank - 784
2. Bank of India - 965
3. Canara Bank - 1200
4. Corporation Bank - 84
5. UCO Bank - 550
6. Union Bank of India - 519

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018

ஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2018, 14.10.2018, 201.10.2018 மற்றும் 21.10.2018

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com