ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு..! அழைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்

திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71
ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு..! அழைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்


திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 71

பதவி: Welder - 26
பதவி: Fitter - 38
பதவி: Machinist - 07

சம்பளம்: மாதம் ரூ.34,300

வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 201.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: திருச்சி
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bheltry.co.in/careers/main_advt.jsp அல்லது https://www.bheltry.co.in/careers/docs/advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 201.12.2108

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com