விமானப்படையில் குரூப் "சி" பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38

பணி: குரூப் "சி"  

தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், 6 பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Auxiliary Nurse Midwifery முடித்து பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வின்போது அட்மிட் கார்டு மற்றும் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_11_077_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.04.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.01.2018

மேலும் விண்ணங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் மேற்கண்ட இணைய முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com