இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38
பணி: குரூப் "சி"
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், 6 பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Auxiliary Nurse Midwifery முடித்து பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வின்போது அட்மிட் கார்டு மற்றும் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_11_077_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.04.2018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.01.2018
மேலும் விண்ணங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் மேற்கண்ட இணைய முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.