நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 78 நீதிமன்ற ஜூனியர் அண்டெண்டென்ட், சேம்பர் அட்டெண்டண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 78
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Court Attendant
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chamber Attendant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/recruitement20032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.