பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் காலியாக உள்ள 330 புரபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NOTIFICATION NO. 03/2018
பதவி: Probationary Assistant Manager (Credit)
காலியிடங்கள்: 330
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் துறையில் எம்பிஏ, முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/PAM/English%20Detailed%20Advertisement_PAM_330%20vacancies_Final.pdf வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2018