அரசு தேர்வு பணித் தேர்வுக்கு பிப். 19, 20-இல் இலவச கருத்தரங்கம்

அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் பயனடையும் வகையில், சென்னையில் இலவச கருத்தரங்கம் பிப்ரவரி 19, 20-ஆம் தேதிகளில் நடை

அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் பயனடையும் வகையில், சென்னையில் இலவச கருத்தரங்கம் பிப்ரவரி 19, 20-ஆம் தேதிகளில் நடை
பெறுகிறது.
இதுகுறித்து சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் "தி வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆஃப் காம்பிடிடிவ் எக்ஸாம்ஸ்' நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ, எஸ்.எஸ்.சி-எம்.டி.எஸ், ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வு வாரியம், காப்பீடு துறை ஆகியன அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதை எளிமையாக்கும் நோக்கத்தில் வரும் 19,20 ஆகிய நாள்களில் இலவச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதனால், இதில் பங்கேற்க விரும்புவோர் 9790834213, 9940363727 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com