சமூக பாதுகாப்புத் துறையில் கணக்கு உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக பாதுகாப்புத் துறையில் கணக்கு உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சமூக பாதுகாப்புத் துறையில் கணக்கு உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்பில் வர்த்தகம், கணக்கு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏதேனும் நிறுவனத்தின் கணக்குகள் துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
www.tn.gov.in/department/30 http://www.tn.gov.in/job_opportunity  அல்லது www.socialdefence.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடத்துக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் வரும் 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வர வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை ''ஆணையர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண்: 044-26421358.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com