இணையதளம் மூலம் நடைபெற்று வரும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் 1,045 பேர் புதன்கிழமை (மே 24) இடமாறுதல் ஆணை பெற்றனர்.
மேலும் இந்தக் கலந்தாய்வில் 10 கணினி பயிற்றுநர்கள், 4 வேளாண்மை பயிற்றுநர்களும் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்தார்.