எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தத்கல் முறையில் இன்றும் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க வியாழக்கிழமையும் (டிச.8) வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க வியாழக்கிழமையும் (டிச.8) வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25 -ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தத்கல் முறையில் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தால் விண்ணப்பத்தை வியாழக்கிழமையும் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com