குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முன்னதாக, வியாழக்கிழமையுடன் (டிச. 8) விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் விஜயகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பிரிவில் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலியிடங்கள் உள்ளன.
இந்தக் காலியிடங்களை நிரப்பும் வகையில், தேர்வு அறிவிக்கை நவம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு டிசம்பர் 8-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 12-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேர்வுக்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15-ஆம் தேதி கடைசி. எனினும் முதனிலைத் தேர்வுக்கான தேதியில் மாற்றம் இல்லை.
இதற்கு மேல் எந்தக் காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதிநாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com