டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: நாளை இலவச கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மையத்தில்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மையத்தில் சனிக்கிழமை (நவ.19) நடைபெறவுள்ளது.
குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 29 துணை ஆட்சியர், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட மொத்தம் 85 உயர் பதவிகளுக்கான தேர்வுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தத் தேர்வுக்கு தயாராகும் முறை, பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணாநகரில் உள்ள வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மைய அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான மாதிரித் தேர்வு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் 9600124042, 044-26265326 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்த மையத்தின் இயக்குநர் மு.சண்முகம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com