இங்கு கருவறையில் இராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரும், எதிரில் கையில் புத்தகத்துடன் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சனேயரும் உள்ளனர். இராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளிக்கிறார். அழகிய சிறபங்களும், மனதை மயக்கும் ஓவியங்களும் நிறைந்து இக்கோவில் காட்சி அளிக்கிறது. பெருமாள் கருவறை சுவரில் இராமர் பிறப்பு முதல் பட்டாபிஷேகம் வரை ஓவியமாக இராமயணக் கதை வரையப்பட்டுள்ளது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். படங்கள்: கடம்பூர் விஜயன்