ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலைப் பெருமான் திருவருளால் அரனருள் ஆறாம் ஆண்டு திருமந்திர மகாநாடு சிவதீட்சை வழங்கும் விழா செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில் (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய மூன்று தினங்கள் திருவண்ணாமலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிரிவலம், திருக்கோயிலில் மஹாளய பட்சத்தை முன்னிட்டு மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீப கூட்டு வழிபாடு, திருமந்திர மகாநாடு, சிவதீட்சை வழங்குதல், மகேஸ்வர பூஜை, அன்னதானம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. விழா ஏற்பாடு மற்றும் அன்னதான செலவினங்களுக்கு நன்கொடை அளித்துச் சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும் அரனருள் அறக்கட்டளை சார்பில் சாமி. தண்டபாணி (ஸ்தாபகர் - அரனருள் மற்றும் ஓதுவாமூர்த்தி - லண்டன் சிவன் கோயில்), சிவபூஜாதுரந்தரர் சைவஸ்ரீ சபா. சண்முகசுந்தரம் (தலைவர் - அரனருள்) ஆகியோர் நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர்.